கொரோனா தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்!


ஃபைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் வளைகுடா நாடுகளில் ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கிய இரண்டாவது நாடாக சவுதி அரேபியா மாறியுள்ளது.

ஃபைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியில் 95 சதவீதம் பயன்திறன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்காரணமாக பல்வேறு நாடுகளும் பைசர் தடுப்பூசியை தங்கள் நாடுகளில் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சவுதி அரேபியா தங்களது நாட்டில் ஃபைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கான பதிவு ஒப்புதலை வழங்கியுள்ளது.

கடந்த வாரம், பஹ்ரைன் இதே தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது.

அத்துடன் பிரித்தானியா தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்து அங்கு பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.