தமிழ்நாட்டில் ஜனவரி 2ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!


தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2ஆம் திகதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுகாதாரத்துறையினர், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி அசாம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் வெற்றிகரமாக ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏனைய மாநிலங்களிலும் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஒத்திகை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.