ரி-20 தொடரை வென்றது நியூஸிலாந்து!


நியூஸிலாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் ஆறுதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.

நேபியர் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கோன்வே 63 ஓட்டங்களையும் டிம் செய்பர்ட் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், பாஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப் மற்றும் ஷாயின் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 89 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தி மற்றும் ஸ்கொட் குக்லெய்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மொஹமட் ரிஸ்வான் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.