இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!


இந்தியா மற்றும் அவுஸ்ரேலியாஅணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது.

இன்றைய ஆட்டநேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், கெமரூன் கீரின் 17 ஓட்டங்களுடனும் பெட் கம்மின்ஸ் 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 2 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்னஸ் லபுஸ்சேகன் 48 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஜிங்கியா ரஹானே 112 ஓட்டங்களையும் ஜடேஜா 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் மற்றும் மிட்செல் ஸ்டாக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

193 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதுவரையிலான அடிப்படையில், மார்னஸ் லபுஸ்சேகன் 48 ஓட்டங்களையும் ட்ராவிஸ் ஹெட் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 4 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை அவுஸ்ரேலியா அணி நாளை தொடரவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.