மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!


நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில இடங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

அதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் டாம் வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் உத்தரவு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு 2 இல் உள்ள வாகந்தை மற்றும் ஹுனுபிட்டிய பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு வெள்ளவத்தையில் மயூரா பிளேஸ் மற்றும் ஹல்கவத்தை, பொரளையில் Kalipullawatte, Laksanda Sevana ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.