கண்டி நில அதிர்வு தொடர்பான அறிக்கை அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது!


அண்மையில் கண்டியின் திகன பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அறிக்கையை, சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை விக்டோரியா அணைக்கு அருகிலுள்ள சமீபத்திய நிலநடுக்கம் தொடர்பான இடைக்கால அறிக்கை அடுத்த வாரம் ஒப்படைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டியின் திகனவில் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட சிறிய நடுக்கம் குறித்து ஆராய 11 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.