ஜனாதிபதியின் அதிரடி முடிவு!
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை இடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில் முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை அவர் சுகாதார தரப்பினருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய , சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை