ஜனநாயகத்தை ஒடுக்க பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது!


நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்தின் கருத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, “பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் சீா்திருத்தம் என்பது திருட்டுக்குச் சமம். அதற்காக அவா்களுக்கு ஜனநாயகத்தை ஒடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த சீா்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் வலிமையும் தேவைப்படுகிறது. மேலும் பல சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது’ எனக்  குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக நீதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசுகையில் ‘இந்தியாவில் அளவுக்கு அதிகமான ஜனநாயக உரிமைகளைப் பெற்றுள்ளோம். இதனால்தான் சீா்திருத்தங்கள் கொண்டு வருவது மிகவும் சிரமமாகவுள்ளது.

இவருடைய பேச்சுக்கு எதிா்வினையாற்றும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளாா்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.