ஆந்திராவில் இன்று தடுப்பூசி ஒத்திகை!


கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி ஒத்திகை ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில் அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்த திட்டத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 4 மாநிலங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதில் தடுப்பூசி போடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் அனைத்தும் சோதிக்கப்படுகிறது.

இந்த ஒத்திகைக்காக 25 பயனாளர்கள் (சுகாதார ஊழியர்கள்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 5 அமர்வுகளாக நடைபெறும் இந்த ஒத்திகையின்போது ஒவ்வொரு அமர்விலும் இந்த ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த ஒத்திகை நிறைவடைந்ததும், அது தொடர்பான அறிக்கை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.