ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி சபைத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு ஆரம்பம்!
ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி சபைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மக்களும் ஆர்வமாக வாக்களித்து வருவதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி சபை தேர்தல், 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அதனுடன் சேர்த்து உள்ளூராட்சி அமைப்புகளின் வெற்றிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 6ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகியது. வாக்குச்சாவடிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மேலும், மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் சபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை