இத்தாலியிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு தற்காலிகப்பூட்டு!


இத்தாலியின் மிலனிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர் ஒருவர் அண்மையில் துணைத் தூதரகத்தின் அலுவலகத்திற்கு வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அலுவலகத்தை கிருமி நீக்கம் செய்யவும், அனைத்து ஊழியர்களையும் பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் பொது அலுவலகத்தை எப்போது திறப்பது என்பது குறித்த முடிவு செவ்வாய்க்கிழமை எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.