தனிமைப்படுத்தப்பட்டது வட்டவளை – மவுன்ஜின் தோட்டம்!
அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை – மவுன்ஜின் தோட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மவுன்ஜின் தோட்டம் முடக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தோட்டத்தில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேநேரம், வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை