மஹர சிறைக் கலவர வழக்கு ஒத்திவைப்பு!


மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பிலான வழக்கு மீதான விசாரணை இன்று வத்தளை நீதிமன்ற நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்பாக நடைபெற்றது.

இதன்போது குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் 4 கைதிகளின் மரண விசாரணை தொடர்பிலான அறிக்கையை குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த தவணை விசாரணையில் சமர்பித்திருந்தது.

அத்துடன், அதில், கைதிகள் நால்வருமே துப்பாக்கிச்சூட்டில்தான் பலியானார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஏனைய 7 கைதிகளின் மரண விசாரணை தொடர்பிலான அறிக்கை சமர்பிக்கப்படவிருந்தது.

இருப்பினும் அந்த விசாரணைகள் நிறைவடையவில்லை என்பதை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரியப்படுத்தியுள்ளதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.