மஹர சிறையில் இடம்பெற்ற வன்முறைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித்!


மஹர சிறைச்சாலையில் தொடர்ந்தும் அமைதியின்மை காரணமாக, இரவும் துப்பாக்கிச் சப்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து சுயாதீன விசாரணை அவசியம் என எதிர்கட்சி தலைவர் சஜீத் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விசாரணைகள் உண்மையை கண்டறிவதற்காக பக்கச்சார்பற்றவையாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சிறைச்சாலை கலவரத்துடன் தொடர்புபட்ட ஒருவர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றால் அது எவ்வாறு சுயாதீனமாக காணப்படும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் மஹர சிறைக்குள் பரவியதை தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் பிசிஆர் சோதனையை அவசியம் என வேண்டுகோள் விடுத்த பின்னரே இந்த வன்முறைகள் மூண்டன என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது சிறைச்சாலைகளில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.