மலையகத்தில் தோட்டப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன!




ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய மலையகத்திலும் பல தோட்டப் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

தோட்டப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டப் பாதைகள் அபிவிருத்தி நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் ஊடாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் தானும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.