மொறட்டுவ விபத்தில் பலியான கர்ப்பிணி தாய்,இரு சிறுமிகளின் இறுதி சடங்கு!


மொறட்டுவ விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது.

மொறட்டுவை-ஏகொடஉலன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பலியான கர்ப்பிணி தாய், 7வயது சிறுமி, 1வயது குழந்தையின் இறுதி சடங்குகள் இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொறட்டுவை ஏகொடஉயன புனித மரியாள் தேவஸ்தான மயான பூமியில் அவர்களின் இறுதி கிரியைகள் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.

மொறட்டுவை – எகொடஉயன பகுதியில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி மற்றும் ஒரு வயதுக் குழந்தையும் உயிரிழந்தது.

இந்த நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்த தாயும், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, குறித்த தாயும் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பணித் தாய் ஒருவர், 7 வயது மற்றும் ஒரு வயதான தனது குழந்தைகளுடன், பாதசாரிக் கடவையூடாக, வீதியை கடக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிலொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தனர்.

இதேவேளை இரவு வேளையில், குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.