மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!


முல்லேரியா பகுதியில் கணவரொருவர் அவரது மனைவியை பொல்லால் தாக்கி கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கணவரொருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போதே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் அங்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்ப பிரச்சினையின் காரணமாக முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து கணவன் அவரது மனைவியை பொல்லால் தாக்கியுள்ளார்.

கணவனின் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரை கைது செய்துள்ள முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.