வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!


இலங்கையை அண்மித்து வளிமண்டளத்தில் ஏற்பட்டுள்ள தலம்பல் நிலைமைக் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டவலியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏனைய சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், மின்னல் தாக்கம் மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.