மற்றொரு ஆபத்தான நோய் பரவுகிறது இலங்கையில்!!

 


நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு மணல் பூச்சிகளால் பரவும் தோல் நோயான லீஷ்மேனியாசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளனர்.

லீஷ்மேனியாசிஸ் என்பது உலகின் 9ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த நோய் மணல் பூச்சி மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கியமானவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.

எனவே, லீஷ்மேனியாசிஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வு திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அநுராதபுர விஜயபுர மாகாண சுகாதார பயிற்சிப் பிரிவில் நடைபெறும் என்று அனுராதபுர மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.