‘உதிரம் கொடுத்து உயிர்காப்போம்’ இரத்த தானம் நிகழ்வு!
நுவரெலியா- கொட்டகலை பகுதியில் ‘உதிரம் கொடுத்து உயிர்காப்போம்’ இரத்த தானம் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
‘ரொட்டரெக்ட்’ கழகத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை ஶ்ரீமுத்து விநாயகர் ஆலய மண்டப வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பெரும்பாலானோர் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு குருதிக்கொடை செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெறுவதில்லை. இதனால் இரத்த வங்கியில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இந்நிலையிலேயே நெருக்கடி நிலைமை ஏற்படாமல் இருக்கும் நோக்கில், மேற்படி இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘உதிரம் கொடுப்போம், உயிர்காப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றியே குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் ராகம, டிக்கோயா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை