வேல்ஸில் அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும்!
கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய மாலையில் இருந்து வேல்ஸில் அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு நான்காம் நிலை முடக்கநிலை தொடங்கும். முடி திருத்துமிடம் போன்ற நெருக்கமான தொடர்பு சேவைகளும் கிறிஸ்மஸுக்கு முன்பு மூடப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று அனைத்து பப்கள், அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் 18:00 மணிக்கு மூடப்படும்.
இதற்கிடையில் பண்டிகை காலத்தில் இரண்டு வீடுகளை மட்டுமே சேர்ந்தவர்கள் சந்திக்க முடியும எனவும் முதலமைச்சர் கூறினார்.
ஐந்து கொவிட்-19 சோதனைகளில் ஒன்று சாதகமான முடிவைத் தருவதால் வேல்ஸின் நிலைமை மிகவும் தீவிரமானது என முதலமைச்சர் விபரித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை