கொரோனாவால் அர்ஜெண்டீனாவில் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அர்ஜெண்டீனாவில் 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் 15இலட்சத்து மூவாயிரத்து 222பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 41ஆயிரத்து 41பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 62பேர் பாதிக்கப்பட்டதோடு, 275பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 61பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் மூவாயிரத்து 478பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 40ஆயிரத்து 120பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை