'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!!

 


சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ’ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக புதுவையில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’மாநாடு’ படத்தின் புதுவை படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.


’ஈஸ்வரன்’ படத்தை அடுத்து ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது என்றும் ’மாநாடு’ படத்தை ஏப்ரல் மாதம் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் 2021 ஆம் ஆண்டு முற்பகுதியிலேயே சிம்புவின் இரண்டு படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.