ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக கைது!!
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் இதுவரையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியைப் பேணாமை காரணமாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை