பிரபல வர்த்தக நிலையம் மட்டக்களப்பில் இழுத்து மூடப்பட்டது!


மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இன்று திங்கட்கிழமை குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிவந்த 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , வர்த்தக நிலையத்திற்கு சென்ற வந்தவர்களைளையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.

ஆரையம்பதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.

பொது சுகாதார அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்தை மூடியுள்ளதுடன் இங்கு கடமையாற்றிய 20 பேரை இன்று திங்கட்கிழமை தனிமைப்படுத்தியுள்ளதுடன், ஏனைய 15 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்பனவு செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.