சடலம் வீட்டுக்காணியில் எரியூட்டப்பட்டது- யாழில் சம்பவம்!!


 யாழ்ப்பாணம் புத்தூரில் சடலமொன்று வீட்டுக் காணியில் எரியூட்டப்பட்டுள்ள அவலமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது..

புத்தூர் கலைமதி கிராமத்தில் ஏறபட்ட  கடும்ப பகை விரிவடைந்து, இரு தரப்பு மோதலாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் தனிப்பட்ட குடும்ப விவகாரம் பின்னர் இரு தரப்பிற்கிடையிலான மோதலாக- ஒரே சமூகத்திற்கிடையிலேயே இடம்பெற்று வருகிறது.

இதனையடுத்து அதை சாதிய மோதலாக சித்தரிக்க வெளிநாடுகளிலிருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வரும் சாதியவாதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

புத்தூரிலுள்ள கிராமிய கட்சியொன்றும் அதை சாதிய மோதலாக சித்தரிக்க முயன்றதுடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில், ஆதிக்க சமூகத்தினர் உடல்களை தகனம் செய்ய முயல்வதாக குறிப்பிட்டனர்.

இந்த மோதல் உச்சமடைந்த நிலையில் கிந்துபிட்டி மயானத்தில் உடல்களை தகனம் செய்வது தடைப்பட்டது.

அதன்பின்னர் அது நீதிமன்ற விவகாரமானதுடன் உடல்களை தகனம் செய்ய நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்திருந்தது.

எனினும் யாழ் மேல் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீட்டில், தகனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த கிராமத்திலுள்ள கட்சியின் பிரதிநிதிகள் மேலுமொரு மனு தாக்கல் செய்துள்ளதால், அந்த வழக்கு முடிவடையும் வரை மயானத்தில் உடல்களை தகனம் செய்ய வேண்டாமென பொலிசார் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் , அந்த பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை தகனம் செய்ய இடமில்லாமல் காணி ஒன்றில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.