பணம் - கவிதை!!

 




பணம் என்ன பணம்

நாய் கூட தின்னா பணம்

பணம் பணமென்று

அலைந்தவன் எல்லாம்

இறுதியில் போவது

என்னவோ சுடுகாடுதான்

பணத்தை கொண்டு

எவராலும் மரணத்தை

மறுக்க முடியாது

பணம் இல்லாமல் வாழ்வும் இல்லை 

அன்றாட வேளை உணவுக்காய்

ஐம்பது சதத்துக்காய் உலகில் பல

கோடி மக்கள்

பணம் மித மிஞ்சி

செய்வதறியாது

கூத்தும் கும்மாளமுமாய்

ஒரு கூட்டம்

நல்லவர் பலர்

பணத்தால் பல

நல்ல சேவை

நல்குகிறார்கள்

அவர்கள் ஜதார்த்தம்

உணர்ந்திட்ட

கன வான்கள்

உண்மை என்ன வெனில்

கோடி கோடியாக பணம்

இருந்தாலும்

காதற்ற ஊசி கூட

கூடி வருவதில்லை

பணத்தை கொண்டு

பிணத்தை எரிப்பதும்

இல்லை

பணம் இருக்கும் போது

நிலையாய் நல்ல

செயல் ஆற்றினால்

மரணத்தின் பின்னாலும்

பெயர் நிலைத்து

இருக்கும்...

#இவன்_பாவலன்



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.