கைதடி விபத்தில் நால்வர் படுகாயம்!


 கைதடி – மானிப்பாய் வீதியில் உள்ள சரஸ்வதி சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கைதடி நோக்கி மூவர் பயணித்த நிலையில், அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் வந்த வயோதிபர் ஒருவர் வலப் புறமாக திருப்ப முற்பட்ட வேளை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும், சைக்கிளில் பயணித்த வயோதிபருமாக நால்வர் படுகாயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.