நான் தூக்கி வளர்த்த குழந்தை - சிரஞ்சீவி ருவீட்!
சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், விஜய்சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ உள்பட ஒரு சில திரைப் படங்களில் நடித்தவருமான நிஹாரிகாவின் திருமணம் நாளை உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
உதய்பூரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம்சரண் தேஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள் குடும்பத்துடன் சென்று உள்ளனர்.
இந்த நிலையில் சிரஞ்சீவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நிஹாரிகா குழந்தையாக இருக்கும் போது கையில் தூக்கி வைத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ’எங்கள் கைகளில் வளர்ந்த எங்கள் நிஹாரிகாவை இன்று சைதன்யாவின் கைகளில் ஒப்படைக்கும் இந்த நல்ல தருணத்தில், தம்பதியினருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் சிரஞ்சீவியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை