சொக்லேற் கனவுகள் 8 - கோபிகை!!



வெளியே வந்தவன்,

எதுவும் பேசாமலே

அத்தையிடம் 

தேநீரை வாங்கிப்

பருகிவிட்டு 

'அத்தை நான் வீட்டபோறன்'

என்றபடி நடந்தான்.


அவசரமாய் மகளின்

அறைக்குள் நுழைந்த

அனுதியின் தாயார்,

'ஏய்...என்னடி சொன்ன,

முகம் வாடிப்போறான்,'

என கோபமாய் கத்த,

ஒன்றும் சொல்லாமலே

குளியலறைக்குள் 

நுழைந்து கொண்டாள்

அனுதி.


'பாத்தீங்களா....

நான் கேட்டுட்டே இருக்கிறன்,

எருமை மாட்டில

மழை பெஞ்ச மாதிரி

எனக்கென்ன போச்சு

என்று போறதைப் பாருங்க....'

கணவனிடம் புகார் சொல்ல,


'விடு...விடு....இதென்ன 

அவங்களுக்குள்ள புதுசா,

அப்பப்ப வாறது தானே,

சரியாயிடும்' என்றார். 


மளமளவென

குளித்துமுடித்த அனுதி,

ஆதித்தனின் செல்லுக்கு

அழைப்பை எடுத்து

'நானும் வர்றன்டா,

போகலாம் வா' என்றாள். 


'அனுதின்னா அனுதிதான்

அவளை யாராலயும் 

அடிச்சுக்கவே முடியாது,'

என்றபடி ஆதித்தன் 

அனுதியின் புகழ்பாட


'டேய்...ஒட்டகச்சிவிங்கி

வந்து சேரு, நேரம் போகுது'

என்றுவிட்டு அழைப்பை

துண்டித்தாள். 


'ஏய்..ஏய்...மெதுவா ஏறுடி, 

என்னையும் சேர்த்து

விழுத்துவாய் போலிருக்கே?'

ஆதித்தன் சொல்ல,


ஒன்றும் பேசாமல்

முறைத்துக்கொண்டு 

மறுபுறம் திரும்பினாள் 

அனுதி. 


'பாத்தியா அவங்களை,

இப்பதான் நீ கவலைப்பட்டாய்,

அதுக்குள்ள அவங்க 

ரெண்டுபேரும் ஒற்றுமை'

கணவன் சொல்ல

மெல்லிய புன்னகையோடு 

ஆமோதித்தார் சகுந்தலா. 


கோயிலில் பக்திப்பாடல்

ஒலித்துக்கொண்டிருந்தது.

'ஆதித்தன்- கனிகாவுக்கிடையில்

தான் வேண்டாத ஆளாக,'

என நினைத்தபடி

கீழே கால் பதித்தாள்

அனுதி. 

 

கனவுகள் தொடரும்

கோபிகை.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.