இது தேயிலை தேசம் - கவிதை!!
தேயிலை தேசமிது
தேகம் தழுவும் வாசமது
நோயில்லா பானமது
வேகம் தரும் வீரமது..!
பச்சையை உடுத்தி
பசுமையை போர்த்தி
கவலைகள் மறைத்து
பவளமாய் சிரித்து..,
காட்சியாய் நிற்க்குது பார்
எங்கள் தேயிலை தேசமே...!
முகடுகள் முட்டியே
முக்கோண வடிவமாய்
மலைகளும் உயருமே
வகுடுகள் வார்த்து
காடுகள் கிழித்துதான்
வருகுது பார் ஆறுகளே..!
கொட்டிடும் அருவியின் வேகத்தில்
குருவிகள் தாளங்கள் போடுமே
மரங்களின் நெறுக்கத்தில் பாய்ந்துதான்
குரங்குகள் கூத்துக்கள் காட்டுமே
இது எங்கள் தேயிலை தேசம்
தினந்தோறும் வீசிடும் வாசம்..!
மஞ்சளும் செம்மஞ்சளும்
கலந்திட்ட பூக்களுமே
மனதுக்கு கொடுத்திடும்
புது பாக்களுமே
சுமைகளை கடத்தும்
வெண் மேகங்களே
கொஞ்சம் கரைத்தே செல்லும்
எங்கள் சோகங்களே..!
வலியுண்டு இருந்தும்
வருந்தவில்லை
வழிகாட்டும் கல்வியுண்டு
அதனால் கவலையில்லை
இது எங்கள் தேயிலை தேசமே
தினந்தோறும் வீசிடும் நல் வாசமே...!
பெரியசாமி நிர்மலா
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை