வகுப்பறையில் தாலி கட்டிய பள்ளி மாணவன்!!


 கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வெளியான ஒரு வீடியோவில் ஒரு பள்ளி மாணவன் தன்னுடன் பயிலும் ஒரு மாணவிக்கு வகுப்பறையில் வைத்தே தாலிக் கட்டுகிறார். அதோடு குங்குமத்தையும் வைக்கிறார். இந்தக் காட்சி இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் திருமண பாதுகாப்புத் தடைச்சட்டம் 2006 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.


ஆந்திர மாநிலம் தெற்கு கோதாவரி பகுதியில் இயங்கி வரும் ஒரு அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவன், தன் சக வகுப்பு மாணவிக்கு தாலிக் கட்டுகிறார். அதுவும் வகுப்பறையில் வைத்து. மேலும் இந்த திருமணத்தை ஒரு பெண் அருகில் இருந்தவாறு வீடியோ எடுக்கிறார். திருமணத்திற்கு பிறகு அந்த வீடியோவை இணையத்திலும் மாணவர் வெளியிடுகிறார். இதனால் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பு கிளம்பியது.


17 வயதுடைய பள்ளி மாணவன் திருமணம் செய்து கொண்டதால் அம்மாவட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட மாணவியை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாமல் வீட்டை விட்டு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்த மகிலா பெண்கள் அமைப்பினர் அந்தப் பெண்ணிற்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளனர். சிறுவயதில் திருமணம் நடந்த திருமணத்தால் ஆந்திர மாநிலத்தில் கடும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட இருவர் மற்றும் உதவி செய்த ஒரு பெண் ஆகியோரைக் கண்டித்து அந்தப் பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.