அம்பாறை வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல்!!

 


வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை – பானம பிரதேசவாசிகளால் நேற்றிரவு வெள்ளிக்கிழமைபானம வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த தாக்குதலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி பானம – குடும்பிகலயில் சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பிரதேச வாசிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வனவிலங்கு காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதமேற்படுத்திய 5 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, அவர்களை இன்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.