ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்📸

 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று24 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடகவியலாளர் அமையத்தில் நடைபெற்றது.


கடந்த 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை சுகிர்தராஜன் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.

மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட அழுத்தங்கள் ஏற்பட்டன.

சுகிர்தராஜன் யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு- குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ்

மாநகர முதல்வர் சரவணபவன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன் அரியநேந்திரன் யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் 

பிரசன்னா சிவிலமைப்புக்கள் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.