வடகில் சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்!


 அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்பு!

அழகு நிலையமொன்றிற்குள் மணப்பெண்கள் உள்ளிட்ட 6 பேர் மயக்கமடைந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மீரிகம பகுதியில் நேற்று இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மீட்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இல்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் திருமணத்தின் பின்னரான வீட்டிற்கு வரும் விழாவிற்கு ஆடை அணிந்திருந்த இரண்டு மணப்பெண்கள் மயக்கம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏர் கண்டிஷனர் மூலம் வெளியேறிய நச்சு வாயுவை அவர்கள் சுவாசித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏர் கண்டிஷனருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு ஜெனரேட்டர் கட்டிடத்திற்குள் நச்சு வாயு பரவுவதற்கு காரணமாக இருக்கலாம், இதன் விளைவாக அவர்கள் மயக்கமடைந்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட்ட கோரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கை வடக்கு மாகாணத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேல் மாகாணம் மற்றும் அம்பாறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சுகாதாரத் துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அதனை இடைநிறுத்துமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு இன்று பணிக்கப்பட்டது.

அது தொடர்பில் கேட்ட போதே வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

´கொரோனா வைரஸ் பரவல் அதிக அபாயம் உள்ளதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருவோரை 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தும் நடவடிக்கை அவசியமில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசர அவசியம் ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விண்ணப்பித்து அவரது அனுமதியுடனேயே அபாய வலயங்களிலிருந்து அபாயம் குறைந்த வலயங்களுக்கு வரும் நபர்களை சுயதனிமைப்படுத்த முடியும்´ என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.