அரச சேவைக்கான வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்!




கிழக்கு மாகாணத்தில் 2021ம் ஆண்டின் அரச இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

18/01/2021 இலிருந்து இடம்பெறவிருந்த மாகாண இடமாற்றங்கள் அனைத்தும்  ஆளுநரின்பணிப்புரைக்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தில் நிலவும் கொவிட் -19 நிலமை காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும், கிழக்கு மாகாணத்தில் பரவலான பகுதிகள் முடக்கப்படுவதால் அதனை முறையாக செய்வதற்கு முடியாத காரணத்தால் அனைத்து இடமாற்றங்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.