கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
கொழும்பில் நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேபோன்று நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முகக்கவசம் அணிவதுடன் , உரிய சுகாதார விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதற்கமைய , முகக்கவசம் அணியாதவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி , மேல்மாகாணத்தை விடுத்து , நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கவசம் அணியாதவர்களை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது , இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களில் 2400 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை