நாட்டில் இன்று மட்டும் 403 பேருக்கு கொரோனா தொற்று!


நாட்டில் இன்று மட்டும் 403 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 774 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 535 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 37 ஆயிரத்து 252 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும், ஏழாயிரத்து 311 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இன்று மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை பதிவாகியுள்ள நிலையில் மொத்த மரணங்கள் 211ஆக உயர்ந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.