தமிழகத்தில் புதிதாக 838 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
தமிழகத்தில் புதிதாக 838 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 21 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 229 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இதுவரை மொத்தம் 8 இலட்சத்து ஆயிரத்து 414 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை