வியட்நாமில் அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!
வியட்நாமில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கக்கப்பட்டுள்ளது.
சுமார் 98 மில்லியன் மக்கள் வாழும் வியட்நாம் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் வெற்றிகரமாக நாடாக உள்ளது.
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் இருந்து, இதுவரையான காலப்பகுதியில், அந்நாட்டில் ஆயிரத்து 739 கொரோனா தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன் 35 பேர் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், அண்மைய கொரோனா பரவல் நிலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை சுகாதார அமைச்சர் நுயென் ட்ரூங் சோன் இன்று (சனிக்கிழமை) அரசாங்க அறிக்கையில் தெரிவித்தார்.
எனவே. சந்திரப் புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக அதாவது, பெப்ரவரி ஆறாம் திகதிக்குள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரப் புத்தாண்டு விடுமுறைக்கு முன்னர் 10 ஆயிரம் கொரோனா வழக்குகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற எதிர்பார்ப்பை மையப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 மில்லியன் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை