இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மாத்திரம் 4பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்று மாத்திரம் புதிதாக  670 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக  காணப்படுகின்றது.

அத்துடன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 480 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை 43 ஆயிரத்து 747 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 901பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.