பிரான்ஸில் கொவிட்-19 தடுப்பூசியால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்படவில்லை!


பிரான்ஸில் இதுவரை போடப்பட்டுள்ள கொரோனாத் தடுப்பு ஊசிகளால் எந்த விரும்பத்தகாத விளைவுகளும் இதுவரை பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களிற்கான பாதுகாப்பு நிறுவனமான, ANSM (Agence nationale de sécurité du médicament et des produits de santé) இந்த தகவலினை தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் தற்போது ஃபைஸர்- பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஊசிகள் போடப்பட்ட 500 பேரின் தகவல்கள் இந்த நிறுவனத்தினால் ஆய்விற்கும், தொடர்ச்சியான கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ANSM வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாங்கள் கொரோனாத் தடுப்பு ஊசிகளின் ஆரம்பப் பகுயில் தான் நிற்கின்றோம். ஆனாலும் எங்களிற்கு ஏற்கனவே மருத்துவமனைகளில் செய்த ஆய்வுகளின் தரவுகளும் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஃபைஸர்- பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு ஊசிகளை போட்டுக்கொண்ட அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.