ஆஸி அணிக்கெதிரான நான்காவது டெஸ்டிலிருந்து பும்ரா விலகல்!


அவுஸ்ரேலிய அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.

தீவிரமான மருத்துவ சிக்கலினால் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா எதிர்வரும் போட்டியிலிருந்து விலகுவதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவுக்குப் பிறகு மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் காயமடைந்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மெல்பேர்னில் வலை பயிற்சியில் ஈடுபட்ட மாயங்க் அகர்வாலின் உடற்தகுதி குறித்தும் இந்தியா நிர்வாகம் கவலைக் கொண்டுள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியில் சேர்க்கப்பட்ட ஷார்துல் தாக்கூர் மற்றும் டி நடராஜன் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இருப்புக்களில் உள்ளனர். இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கட்டைவிரல் உபாதைக் காரணமாக ரவீந்திர ஜடேஜா, சிட்னி டெஸ்டின் இறுதி நாளில் வலியால் துடுப்பெடுத்தாடிய அஸ்வின், தொடை எலும்பு உபாதைக் காரணமாக ஹனுமா விஹாரி ஆகியோரின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஏற்கனவே கே.எல். ராகுல் உபாதைக் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.