கடந்த வருடத்தில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்!


கடந்த 2020ம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரில் 225 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

குறித்த தீவிரவாதிகள் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீதும் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட படையினர் அவர்களை சுட்டு கொலை செய்ததாக அவர்  தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 90 இடங்களில் தீவிரவாதிகளுடன் சண்டை நடத்தியதாகவும் ஜம்முவில் 13 இடங்களில் சண்டை நடத்தி வெற்றிகரமாக தீவிரவாதிகளை அழித்துவிட்டதாகவும் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் மேலும் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கி சண்டையின்போது பாதுகாப்பு படையினர் 44 பேரும் உயிரை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.