கொவிட் தடுப்பூசிக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

 


கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட தடுப்பூசிதான் இரண்டாவது டோஸிலும் போடப்படப்பட வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

முதல் டோஸில் ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியும், இரண்டாவது டோஸில் வேறு ஒரு நிறுவனத்தின் தடுப்பூசியையும் ஒருவருக்குப் போடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஒவ்வாமை உள்ள நபர்கள், உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு 4 முதல் 8 வாரங்களுக்கு பின்னரே தடுப்பூசிபோட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிளாஸ்மா தெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் அல்லது வேறு நோய்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் அவர்கள் குணம் அடைந்ததில் இருந்து 4 முதல் 8 வாரங்களுக்கு பின்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.