தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு!


நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி களுத்துறை – இந்துவர பகுதியின் துன்தூவ கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேருவளை பகுதியில் 9 கிராம சேகவர் பிரிவுகளும் பானந்துறை பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவும் களுத்துறை பகுதியில் 20 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.