மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையில் விசேட புத்தாண்டு திருப்பலி


புத்தாண்டு திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்த வண்ணம் ஒரு தொகுதி கிறிஸ்தவ மக்கள் திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் காலை 6 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியினை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலியின்போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கினர். அதே நேரத்தில் மக்களின் ஆன்மீக நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பங்குகளிலும் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட அளவு மக்களின் பங்கு பற்றுதலுடன் திருப்பலிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.