முல்லைத்தீவில் மினி சூறாவளி!


முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிலாவத்தை தீர்த்தக்கரை பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.

இந்த மினி சூறாவளி காரணமாக மீனவரின் வாடியொன்று சேதமடைந்துள்ளதோடு, மேலும் சில கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

திடீரென கடற்கரையில் இருந்து வந்த மினி சூறாவளி தனது வாடியை ஊடறுத்துச் சென்றதாக மீனவர் தெரிவித்துள்ளார். மேலும்  இதனால் வாடியின் கூரை பகுதி தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வாடியில் இருந்த பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த சம்பவம் காரணமாக உயிர் ஆபத்துக்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.