நாடாளுமன்ற சபை அமர்வுகளில் ரஞ்சனை பங்கேற்க வைப்பதற்கு நடவடிக்கை!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்குமென  நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 மனோ கணேசன்  தனது ருவிட்டர் பக்கத்திலேயே  இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ருவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது “ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்ற கூட்டங்களில் சமூகமளிக்க அனுமதிக்குமாறும், இது நீதிமன்ற வரம்புக்கு வெளியே  நாடாளுமன்றத்தின் உரிமை என்ற அடிப்படையில், சபாநாயகரை ஐக்கிய மக்கள் சக்தியான எதிரணி அதிகாரபூர்வமாக கோரும்” என பதிவேற்றியுள்ளார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.