சீனி இறக்குமதியில் மோசடி இடம்பெறவில்லை!


சீனி இறக்குமதியில் 10 பில்லியன் ரூபா வரிமோசடி இடம்பெற்றிருக்கவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சீனி இறக்குமதிக்காக வரிச்சலுகை வழங்கப்பட்டதன் ஊடாக இந்த வரி மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்க்பட்டிருந்தன.

இந்த நிலையில், நாடாளுமன்றில் இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, அவ்வாறான வரி மோசடிகள் இடம்பெறவில்லை எனவும் அது தொடர்பான அறிக்கைகளை தாம் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அதில் வரிமோசடி இடம்பெற்றதாக பதிவாகவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.